ETV Bharat / city

இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் ஏற்பட்ட நட்பு - கைவிடாத மனைவிக்கு கத்திக்குத்து!

author img

By

Published : Apr 30, 2022, 12:03 PM IST

இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் ஏற்பட்ட நட்பை கைவிடாத மனைவி மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்பில் இருந்தவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் பழக்கத்தை கைவிடாத மனைவிக்கு கத்தி குத்து!
இன்ஸ்டாகிராம் பழக்கத்தை கைவிடாத மனைவிக்கு கத்தி குத்து!

சென்னை: அயனாவரம் வசந்தகார்டன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்வேதா(19). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராகேஷ்(19) என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் சத்ய கண்ணன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கணவர் ராகேஷிற்கு தெரியவந்துள்ளது. இந்த தொடர்பை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு ராகேஷ், ஸ்வேதாவிடம் எச்சரித்துள்ளார். ஆனால், மனைவி தொடர்பை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த ராகேஷ் நேற்று முன்தினம்(ஏப். 28) ஸ்வேதாவின் செல்போனிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வருமாறு சத்திய கண்ணனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

வழக்குப்பதிவு: ராகேஷ், அவரது நண்பர் மற்றும் மனைவி ஸ்வேதாவுடன் அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த சத்யாவிடம் தொடர்பை துண்டிக்குமாறு கூறி ராகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென ராகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் முதுகில் குத்தியுள்ளார். . இதனைத் தடுக்கவந்த சத்ய கண்ணன் கழுத்திலும் குத்திவிட்டு தப்பியோடினார்.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸில் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நெல்லை: மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற மோதலில் மாணவர் உயிரிழப்பு!'

சென்னை: அயனாவரம் வசந்தகார்டன் தெருவைச் சேர்ந்தவர் ஸ்வேதா(19). இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ராகேஷ்(19) என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் சத்ய கண்ணன் என்பவருடன் தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கணவர் ராகேஷிற்கு தெரியவந்துள்ளது. இந்த தொடர்பை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு ராகேஷ், ஸ்வேதாவிடம் எச்சரித்துள்ளார். ஆனால், மனைவி தொடர்பை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த ராகேஷ் நேற்று முன்தினம்(ஏப். 28) ஸ்வேதாவின் செல்போனிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வருமாறு சத்திய கண்ணனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.

வழக்குப்பதிவு: ராகேஷ், அவரது நண்பர் மற்றும் மனைவி ஸ்வேதாவுடன் அங்கு சென்றார். அப்போது அங்கு வந்த சத்யாவிடம் தொடர்பை துண்டிக்குமாறு கூறி ராகேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென ராகேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஸ்வேதாவின் முதுகில் குத்தியுள்ளார். . இதனைத் தடுக்கவந்த சத்ய கண்ணன் கழுத்திலும் குத்திவிட்டு தப்பியோடினார்.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸில் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'நெல்லை: மாணவர்களுக்கிடையே சாதி ரீதியாக நடைபெற்ற மோதலில் மாணவர் உயிரிழப்பு!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.